தேவதை

| | 0 comments


அந்தி மாலை கதிரவன்
அழகு நிலா பவனி
அந்தி மலரும் அல்லி
மதி மயக்கும் முல்லை
கூடு திரும்பும் பறவை கூட்டம்
இவை யாவும் காத்திருக்கின்றன
விளக்கொளியில் என் தேவதை
நின் திருமுகம் காண - நானும் தான்

மேகம்

| | 0 comments


புவிதனை குளிர்விக்க
வானெங்கும் ஒளி விளக்கேற்றி
மேல தாளம் முழங்கிட
நின் கரம் நான் பற்ற
நீயோ நாணம கொண்டு
காற்றோடு ஓடுகிறாய்
உன்னை பின்தொடர்ந்து
அனைத்தில் நீ என்னுள்ளும்
நான் உன்னுள்ளும்
உருகி இணைகிறோம் .

முறிவு

| | 0 comments

நம் உள்ளம விரதம்
கலைக்க முற்பட்டபோதும்
மௌனம வித்திட்ட
விரிசல்களின் இடைவெளிகள்
மௌனம இட்டே
நிரப்ப விழைகின்றன இதழ்கள்
பின் காரணமே இன்றி
சந்தையில் விலை
பேசபடுகின்றன நமக்குள்
ஏற்பட்ட உறவினை முறிக்க

அர்த்தமுள்ள பயணங்கள்

| | 0 comments


உனை கான எத்தனிக்கும்
ஒவ்வொரு பயணத்திலும்
என் மீது மோதும் காற்றின்
அழுத்தம் தாளாமல்
நெஞ்சில் பீறிட்டு எழும்
வார்த்தைகளை சற்றும் பிசகாமல்
கோர்வையாக்கி எழுத முயர்சிப்பதில்
உருவாகும் வரிகள் அனைத்தும்
புது கவிதையென மிளிர்கிறது

இப்பொழுது எல்லாம் பயண முடிவில்
நான் காணும் உனது புன்னகை
முகத்திற்கான பயணங்கள் மட்டுமே
அர்த்தமுள்ளதாய் தோன்றுகின்றன

சிறு பிரிவுக்கு பின் சேர்ந்ததில்
ருசிக்கும் இன்பங்களை மிக
சிரத்தையோடு சேமித்து கொள்கிறேன்
அடுத்த பிரிவின் போது
அசை போட வேண்டுமென

உண்மை அன்பின் நிலை

| | 0 comments

உண்மை அன்பினை தேடி அலைந்ததில்
அரும்பிய புதிய உறவுகள் அனைத்தும்
நமது வலிகளில் இன்பம் காணும்
உன்னத நிலையை அமைய பெற்றவை
தன்னை உருக்கி வெளிச்சம் காட்டும்
...மெழுகாய் இருக்கும் வரை மட்டுமே
உறவுகளின் அன்பும் பாசமும்.

எங்கு செல்கிறோம்

| | 2 comments


உணவுக்காக உழும் போதும்
நீருக்காக தோண்டும் போதும்
அமைதியாய் அரவணைதவள்
தான் கண்ட இடம் எங்கும்
இயந்திரம் கொண்டு ஆழ்துளை
அமைத்து நில மகளினை ஆழம்
பார்க்க நினைத்ததன் பயனாய்
தன் ருத்ர தாண்டவம் காட்டி
தன் நிலை விட்டு சற்றே விலகி நிற்கிறாள்
நிதானமாய் உருகி நதியாய் வளம் சேர்த்த
வெள்ளி பனி மலையரசி மரம் இன்றி
பாலைவன மாகி போன காடுகளை கண்டு
சற்றே வேகம் கொண்டு கடலோடு கலந்து
ஆழி பேரலையென ஆர்பரிகிறாள்.
இவை இன்றி , நாம் கண்ட அறிவியலே
காற்றாய் மழையாய் விஸ்வருபம் கொண்டு
நம்மையே அழிக்க பரவி திரிகிறது ...
போதுமா?? எதை நோக்கிய பயணம் இது ?

பருவகாலங்கள்

| | 0 comments


கோடையின் வெம்மையும்
இளவேனில் காலத்து வசந்தமும்
கூதிரின் பிரிவும் என தினம்
மாறும் பருவகாலங்கள் என்னுள் .

ஐயம்

| | 0 comments

சற்று நில் ஒரு ஐயம்
இன்னும் சற்று தூரத்தில் தான்
நீ வீழும் இடம் , ஆர்பரித்து ,
துள்ளி விளையாடி,
செல்லும் இடம் எல்லாம் வனப்புகளை
காட்டி விட்டு ,உலகம் மறந்து வருகிறாய்
தெரிந்து தான் வருகிறாயோ ?
எங்கே கற்று கொண்டாய்
விழுந்தவுடன் எழுவதற்கு
எனக்கும் கற்று கொடு

திருடர்கள் ஜாக்கிரதை

| | 0 comments

ஒரு நொடி இன்பதாலும் ஓர் ஆயிரம்
வலிகளாலும் உன்னை பிணைத்து விட்டு
உனது நித்திரையை நிம்மதியையும் களவாடி
கொண்டு போகிறார்கள் .

தனிமை

| | 2 comments

உன்னோடு கழிக்கும் நாட்கள் கூட
மின்னல் என மின்னி மறைகின்றன
வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல்
உன்னை பிரிந்து இருக்கும் சில நிமிடங்கள் கூட
பாலை வன நெடும் பயணமென
முன்னேற மறுக்கின்றன

எதிர்பார்பற்ற அன்பு

| | 2 comments

அன்பெனும் ஒற்றை
வார்த்தையை நோக்கிய
பாலை வன பயணங்களில் ,
தேவைகளை சுருக்கி
உடல் வருத்தி ,செய்த உதவிக்கு
எதிர்பார்பற்ற அன்பு என
நாமாகரணம் சூட்டி
என்னை எட்டி நிறுத்தி
வேடிக்கை பார்கிறது உலகம் .

உறவுகள்

| | 0 comments

உயிர் கண்ட உறவுகளின்
சிறு துளி கண்ணீரும் ,
ஆழி புயல் என நெஞ்சில்
மையம் கொள்கின்றன .

அழகன்

| | 0 comments

சிற்பங்களும் சிந்தை மயங்கிடும்
உன் சிறு புன்னகை கண்டு
நான் எம்மாத்திரம் ?
உன் இதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு சிறு வார்த்தைகளும்
என்னுள் காவியமாகின்றன .
| | 0 comments

வாழ்வின் எனக்கான
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
தனிமையில் கழிகின்றன,
கானல் நீராகி போன காதலை எண்ணி.

காமத்தீ

| | 0 comments

நான் ஏற்றா வில்லென கண்களும்
நேர் நோக்கா குனிந்த முகமும் என
அழகியலின் அத்துணை அம்சமும்
அடங்கிய பெண் ஓவியம் நீயடி ,
ஒவ்வொரு முறை
படிக்கும் போதும் ,
புதிரான அர்த்தம
தரும் கவிதையும்.
அன்பிலகனத்தின் அர்த்தமுமாய் ,
என்னுள் யாவுமகி நிற்கிறாய் .
காமத்தீயை நம் உடலோடு
உடல் பொருத்தி அணைத்து விட்டோம்,
காதலின் அருமை உணர்வித்த
உன்னை பிரிய இயலாமல்
எனது கடமைக்காக செல்கிறேன்
மலர்ந்த முகத்தோடு வழி அனுப்பு .
உன் கணவன் வரும் முன்.
| | 0 comments

மழை நின்ற வானத்தின் ,சிறு தூறல் ஒன்றினை
கையிரென கொண்டு பேரண்ட வெளியிணை
அடைய முயர்த்சித்ததில் எதிரே வந்த தூறல் ஒன்றின்
நுனி பட்டு தவறி விழுந்தேன் .விழுந்த இடம் மேலும்பி
பறக்க நினைக்கும் பறவையின் சிறகென்பதாள் .
இட்சிறகை பற்றி கொண்டே பேரண்ட வெளியிணை
அடைய பயணம் கொள்கிறேன் .
| | 0 comments

ஒரு நாளில் அரைகுறையாய் வாழ்ந்ததில்
என்னுள் முழுதாய் மெல்ல உள்ளே வந்து விட்டாய்
என்னையும் அறியாமல் ,நீ வகுத்த வரையறை கண்டு
கால தேவனின் ஓட்டத்தை ,பன் முறை பெருக்க
எண்ணி அவன் பின் ஓட முயன்றேன் ,
அவனோ மோகம் கொண்ட காதலனாய்
வினாடிகளை ஸ்தம்பிக்க செய்து
என்னை கொள்ளாமல் கொள்கிறான்
| | 0 comments

நிகழ்கால நிதர்சனங்களின் முன்
கடந்தகால நினைவுகள் அனைத்தும்
கட்டாயத்தின் பேரில் கல்லறைக்கு அனுப்ப படுகின்றன.
கால மாற்றத்தில் அற்புதங்கள் ,அர்பங்கலாகவும்
அர்பங்கள் அற்புதங்கலாகவும் உருமாறி கொள்கின்றன.

காதல்

| | 0 comments

உன் மனதை மௌனங்களால் பூட்டி
வைத்து , என்னுள் பூகம்பளுகுக்கான
அறிகுறியை கொணர்கிறாய் .
உன் மௌனம திறக்கும் சாவியை
தேடுவதிலேய எனது நாட்கள் நகர்கின்றன

அருவமாகி போன நினைவுகள் அத்துனையும்
உருவம் கொண்டு உயிர் வாழ துடிக்கின்றன
நீ சொன்ன வார்த்தை கேட்டு .

காமமா இல்லை காதலா ?

| | 0 comments

காமம் தின்ற எச்சத்தில் பிறந்தது காதல் என்பதா?
இல்லை காதல் தின்ற எச்சத்தில் பிறந்தது காமம் என்பதா ?
இப்படி விடை காணமுடியா முடிச்சுகளின் மத்தியில்
என்னை பிணை கைதியாக்கி காலவரைகள் நிர்ணயித்து
என்னுள் எதை தேடுகிறாய் ?

இடைவெளிகள்

| | 0 comments

உனக்கும் எனக்குமான இடைவெளியில்
முன் பனி காலத்தின் மேக பனி
மூட்டங்கள் நிறைந்து உன்னை தழுவி இருபினும்
நீயே மையமென சுற்றிவரும் எனது ஒளி சிதறல்கள்.
என்றேனும் உன்னை வந்தடையும் என்றே எண்ணுகிறேன்
மூட்டங்கள் விலகும் அந்நாள்
நிலவற்ற வானாய் இருந்து விட கூடாதென்பதே
எனது வேண்டுதல் .

வாடகை மனைவி

| | 0 comments

என்னை உயிர் என்பர் ,உணர்வென்பர்,
சகலமும் நீ என்பார், அன்றைய இரவுக்காக !!!
ஒவ்வொரு இரவும் மாறுகிறது எனக்கான காதலும்
காதலர்களும்,எனது வாழ்நாளும் நகர்கிறது
சில நீள் செவ்வக காகிதங்களை நோக்கி

விடை கொடு

| | 0 comments

ஒரு சில வினாடிகளே ஆயினும்
மகிழ்வின் உச்சத்தையும்
வெறுமையின் கொடுமையையும்
ஒரு சேர உணர்ந்து விட்டு
செயற்கையாய் ஒரு புன்னகை சிந்தி
கடக்க இயலா நெடும் பயணத்தை தொடர்ந்துவிட்டேன்
விநாடி முள்கள் இதையத்தை பதம் பார்ப்பதையும் மறைத்து

Base for Relationship

| | 0 comments

Face and personality is Visiting card to the person.

people use to have a relationship with good looking people (at least for an initial stage attraction).

in the same way if you are highly talented (not moderate talented) people wants have relationship with you.

if the Visiting card is good people try to contact you,if not they never think about you.



if you are not fall in above categories,you have another two choice.

you are suppose to be wealthy person or Jovial person.



most of the people (I am not Saying Every one) Fall in love or friendship with some person who is wealthy or good looking.

our present situation is like that we cannot blame any one for this.



if you were not fall in any of the above 4 categories ,sorry its Fact that people never look back to you.



But Gods Grace some people will look for other real part of the persons,it happens in very rare case.

Yes its His/Her Character, which is true realistic and immortal thing in a person.



So Base for relationship is Attraction towards each other.

attraction comes if you are good looks or highly talented this is base for all relationships.



-----
Love
-----------------------
Person Characters
---------------------------------------------
Wealthy person Jovial persons
----------------------------------------------------------
Good Looking Face Highly talented or knowledgeable
-------------------------------------------------------------