வரம்

| | 0 comments

 ஆயிரம் கவலையோடு வீடு 
திரும்பினும் - மகிழ்ச்சியில் 
உறைகிறது நெஞ்சம் 
உன் அர்த்தமற்ற உளறல்களில்
காற்றோடு கரைந்து போகிறேன் 
உன் சிறு தீண்டலில்
நீ அன்பின் மிகுதியில் கொடுக்கும்
முத்தத்திற்காக ஓராயிரம் வருடம் 
காத்திருப்பினும் தகும் 
மகன் எனும் வரமே