தமையன் எனும் தாய்

| | 0 comments

காய பட்ட இதயத்துக்கு
உன் அன்பெனும் மருந்திட்டாய்
நான் இளைப்பாற
உன் தோள் தந்தாய்
என்னை எனக்காக வாழ சொன்னாய்
தமையனாய் வந்து என்
துன்பம் கலைந்தாய்
தாயாய் வந்தென்னை ஆட்கொண்ட தமையா
மீண்டும் ஒரு ஜென்மம் எனில்
உனக்கு தனயனாகும் வரம் தா!!!

நிம்மதி

| | 0 comments

எங்கெங்கோ தேடினேன்
ஒவ்வொரு பொருளிலும்
உயிரிலும் தேடினேன்
தொலைத்த இடம் தெரியமல்
யாரோ சொன்னார்கள்
என்னுள் தான்
தொலைத்திருப்பேன் என்று
இருக்கலாம் ஆனால்
எனக்கு என்னுள் தேட
தெரியவில்லையே!!! .

மீண்ட சொர்க்கம்

| | 2 comments


கவலைகள் மறைய கண்டேன்
கண்ணீர் காற்றில் கரைய கண்டேன்
நீ தந்த பாசம் நெஞ்சில் உலவ கண்டேன்
உன் பாச துளிகள்
மீண்டும் என்னை உயிர்பிக்க கண்டேன்
எனக்கு பாசமெனும் தோள் தந்த
தமையா - உன்னால் !!!

காத்திருக்கிறேன்

| | 0 comments

ஊர் ,உறவு ,நட்பு புடைசூழ வாழ்த்திய போது
வசந்தத்தின் வாசல் திறந்து விட்டது என்றுதான் - நினைத்திருந்தேன்
வாசல் நுழையும் முன்னே புயல் ,
வரும் என்று யாரறிவார்!!!
நாம் நாளைய சரித்திரத்தில் இடம் பெற வேண்டாம்
என்னுள் நீ உன்னுள் நான் முழுதாய் வந்தமர்ந்தாள் போதுமடி
என்னுடைய விசும்பல்களை நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லைதான் - காரணம்
உன்னுள் இருபது நீ , நீ மட்டுமே
எனக்கும் சிறிது இடம் கொடுத்துப்பார் -அப்போது புரியும்
எனது அன்பும், காதலும்
வலிக்கிறதடி காரணம் நீயா இல்லை நானா ?
உன்னில் அன்பை தேடி -தேடி கனத்து விட்டது மனம்
காத்திருக்கிறேன் காலத்தை கண்ணீரில் - கரைத்து கொண்டு !!!
என்றேனும் புரிதல் தோன்றும் என்ற நம்பிக்கையில் .

ஞானத்தை தேடி

| | 0 comments

எல்லோருக்கும் ஞானம் பெற
ஆசைதான்
தேடவும் செய்கிறார்கள்
புத்தனின் போதனைகளை - அல்ல
அவர் ஞானம் பெற்ற
போதி மரத்தை தேடி
பாவம் இதில் போதி மரம்
ஏதும் செய்யவில்லை என்று
தெரியாமலேயே

காதல்

| | 0 comments

இதழ்கள் பேசும்
கண்கள் பேசும்
கைகள் கூட பேசும் - ஆனால்
இன்று தான் கூந்தல் பேச காண்கிறேன்
பெண்ணே நீ சிக்கெடுத்து வீசிய
கூந்தலுடன் நான் பேசும் போது
இது தான் காதலா?

- செந்தில் குமார்

மொழி

| | 1 comments

என்னது அன்பை சொல்ல ,
வார்த்தைகளை தேடினேன்
எதுவும் என் அன்பை சொல்வது போல் இல்லை.
நான் சொல்லாமலே என் அன்பை நீ அறிந்தாய்
பிறகு தான் தெரிந்தது அன்பை சொல்ல
வார்த்தை தேவை இல்லை ,உணர்வுகள் போதும் என்று .

- செந்தில்குமார்