அர்த்தமுள்ள பயணங்கள்

| |


உனை கான எத்தனிக்கும்
ஒவ்வொரு பயணத்திலும்
என் மீது மோதும் காற்றின்
அழுத்தம் தாளாமல்
நெஞ்சில் பீறிட்டு எழும்
வார்த்தைகளை சற்றும் பிசகாமல்
கோர்வையாக்கி எழுத முயர்சிப்பதில்
உருவாகும் வரிகள் அனைத்தும்
புது கவிதையென மிளிர்கிறது

இப்பொழுது எல்லாம் பயண முடிவில்
நான் காணும் உனது புன்னகை
முகத்திற்கான பயணங்கள் மட்டுமே
அர்த்தமுள்ளதாய் தோன்றுகின்றன

சிறு பிரிவுக்கு பின் சேர்ந்ததில்
ருசிக்கும் இன்பங்களை மிக
சிரத்தையோடு சேமித்து கொள்கிறேன்
அடுத்த பிரிவின் போது
அசை போட வேண்டுமென

0 comments: