காத்திருக்கிறேன்

| |

ஊர் ,உறவு ,நட்பு புடைசூழ வாழ்த்திய போது
வசந்தத்தின் வாசல் திறந்து விட்டது என்றுதான் - நினைத்திருந்தேன்
வாசல் நுழையும் முன்னே புயல் ,
வரும் என்று யாரறிவார்!!!
நாம் நாளைய சரித்திரத்தில் இடம் பெற வேண்டாம்
என்னுள் நீ உன்னுள் நான் முழுதாய் வந்தமர்ந்தாள் போதுமடி
என்னுடைய விசும்பல்களை நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லைதான் - காரணம்
உன்னுள் இருபது நீ , நீ மட்டுமே
எனக்கும் சிறிது இடம் கொடுத்துப்பார் -அப்போது புரியும்
எனது அன்பும், காதலும்
வலிக்கிறதடி காரணம் நீயா இல்லை நானா ?
உன்னில் அன்பை தேடி -தேடி கனத்து விட்டது மனம்
காத்திருக்கிறேன் காலத்தை கண்ணீரில் - கரைத்து கொண்டு !!!
என்றேனும் புரிதல் தோன்றும் என்ற நம்பிக்கையில் .

0 comments: